Sunday, April 8, 2012

அறிமுகம்;- ஏறக்குறைய சுமார் 350வருடங்கள் தமிழகம் மற்றும் கர்நாடக,கொங்கணி என்று அழைக்கப்படும் கோவா வரை மற்றும் வேங்கட நாடு என்று அழைக்கப்படும் ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளடக்கிய பகுதிகள் வரை களப்பிரர்கள் என்ற பெயரில் ஆண்டதாக நாம் அறிய முடிகிறது என்றாலும் களப்பிரர்கள் மற்றும் முத்தரையர்களும் ஒன்றே என்றும் கிளைகுடியினர் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.


முத்தரையர்கள் சரித்திரம் குறித்து பல்வேறு வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் மூலம் குறிப்பாக திரு ,மயிலை.சீனி வேங்கடசாமி ,வேதி .செல்வம் ,போன்ற ஆசிரியர்கள் முத்தரையர்களை பற்றி தங்களின் புத்தகங்களில் விரிவாகவே பதிவு செய்து இருக்கிறார்கள் .அவர்களுக்கு இங்கே மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் திரு ராசசேகர தங்கமணி , திரு ,அப்பாதுரையார்,திரு ,நாகசாமி ,திரு .கே .ஜி ,கிருஷ்ணன் ,திரு நீலகண்ட சாஸ்த்ரி ,வேங்கடராமையா ,திரு கோபிநாத அய்யர் , திரு ,கா.பா அறவாணன் போன்றவர்களின் புத்தகங்களிலும் ,பொ,வேல்சாமி அவர்கள் மற்றும் peasant state and society in medivel south india-oxford 1980 -(page 875 to 889 )by BURTON STEIN போன்ற நூல்களும் முத்தரையர் சரித்திரம் குறித்து அறிந்து கொள்ள உதவியாக  இருந்தது . திரு ,நடன காசிநாதன் ,தொல்பொருள் ஆய்வு துறை இயக்குனர் அவர்களின் புத்தகங்கள் முத்தரையர்களின் ஆட்சிகாலம் மற்றும் சரித்திரத்தை தெளிவாக பதிவிட்டுள்ளார் அவரக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமை பட்டிருக்கிறோம் .


அதேபோல் சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய விசயாலய சோழன் முத்தரைய மன்னன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரைய மன்னினிடம் தளபதியாக இருந்தார் என்றும் அவரின் உண்மையான பெயர் காஞ்சிதிரையன் என்றும் அவர்தான் கருத்து பேதமையாலோ, பதவி போட்டியாலோ அம்மன்னனிடமிருந்து பிரிந்து வெளியேறி திருச்சி அருகே உள்ள உறையூர் என்னும் ஊரை தலை நகராகக் கொண்டு ஆண்ட அவன் போரில்  சாத்தன் என்னும் முத்தரைய மன்னனை தோற்கடித்தான் என்றும் சோழர்கள் முத்தரையர்களே என்றும் நூல்கள் நமக்கு தெரிவிக்கின்றன .


நிற்க இந்த mutharaiyar.org என்ற இந்த இணைய தளம் முற்றிலும் முத்தரைய நண்பர்களின் இணைய முக நூல் குழுமம் சார்பாக வெளி வருகிறது ,இந்த குழமம் முத்தரைய இளைஞர்களின் கல்வி ,வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்கள் மற்றும் உதவிகளை பாரிமாரிகொள்ளவும் முத்தரைய இளைய சமுதாயம் தன் இன சரித்திரம் அறிந்து இருக்கவும் இக்குழுமம் துவக்கப்பட்டு திருச்சி ,மற்றும் சென்னையில் நண்பர்களின் சந்திப்பும் நடந்து முடிந்திருக்கிறது ,இதன் மூலம் பல நண்பர்களக்கு வேலை மற்றும் கல்வி குறித்து தகவல்களும் ,தங்களது சொந்த ஊரின் நண்பர்கள் பங்காளிகள் போன்றவர்களை கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக அமைந்துள்ளது .திருமண தகவல்களும் அள்ளிக்கபப்ட்டுள்ளது ,


இந்த இணைய தளம் வெளிவர பெரிதும் உறுத்துனையாக இருந்து ஊக்கம் அளித்தமுத்தரையர் இணைய குழும நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் முத்தரைய சமுதாய பெரியவர்களுக்கும் சிறப்பாக வடிவமைத்து கொடுத்த திரு அமஜத் அவர்களுக்கும்
இணைய முத்தரைய நண்பர்கள் குழுமத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
இரா,சண்முகம் .

------------------------------------------------------------------------------------------------------------
   
முத்தரையர் என்ற பெயர் வரக்காரணம் முத்தரையர்கள் சேர ,சோழ, பாண்டியர்கள் ஆண்ட மூன்று தரைகளையும் முத்தரைய மன்னர்கள் ஆட்சி   புரிந்ததால் (முத் +தரை )முத்தரையர்கள் என்று அழைக்கப் பெறுகிறார்கள்.என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் .     
அரசர்களும் காலங்களும் ;-
பொன்மாந்தனார் --- கி.பி 630 -637  
வாணகோ முத்தரையர் --637 ---642 
மாந்த பருமர் --- 642 -664  
குவாவன் மாறன் @ பெரும்பிடுகு முத்தரையன் --- 655 --680 
மாறன் பரமேஸ்வரன் --680 --705 
சுவரன் மாறன் @ இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் ---- 705 -745 
காடவ முத்தரையன் @ சாத்தன் மாறன் -- 745 -770 
விடேல் விடுகு மார்பிடுகு முத்தரையன் -- 770 --791 
குவணன் சாத்தன் @ விடேல்விடுகு முத்தரையன் -791 --826  
சாத்தன் பழியிலி -- 826 -- 851 
அனந்தன் பழியிலி 851 --860







  

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி  என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர் கோயில் உத்தமதானிசுவரம்   என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக  சோழனுடைய   25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான பெயர் இளங்கோ முத்தரையனின் பட்டபெயரான
உத்தமதானி என்பதுடன் தொடர்புடையதாகும் ,தென்னவன் இளங்கோவேள் என்னும் பெயர் கொடும்பாளுர்த் தலைவன் பூதவிக்ரம் கேசரியின் விருது பெயரை நமக்கு நினைவுட்டுகிறது.இத்தலைவன் கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவனுக்குப் பூதி அரிந்தகைக்கும் பிறந்தவனாக தெரிகிறது .கீரனூர் கீழ்தானியம் ஆகிய ஊர்களில் உத்தம தானிசுவரர் கோயில் இத்தலைவனால் அமைக்கப்பெற்றதாகும் .


அனந்தன் பழியிலி  ;- அனந்தன் பழியிலி என்பான் சாத்தன் பழிலியின் மகளான பழியிலி சிறிய நங்கைக்கும் மீனவன் தமிழ் திரையனான மல்லன் ஆனந்தனுக்கும் மகனவான் .


இதுகாறும் கூறியவற்றால் மரகுடியனராகிய முத்தரையர் பல்லவ பாண்டிய போராட்டத்தில் இருபக்கமும் நின்று போராடியும் தனித்தும் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது நிருபணமாகிறது .


முத்தரையர்கள் இன்று தமிழகம் ,ஆந்திரம் ,கருநாடகம் முதலிய மாநிலங்களில் முத்துராஜா ,முத்திரியர் ,அம்பலகாரகள் ,முத்திரிய நாயுடுகள் என்னும் பல பெயர்களில் வாழுந்து வருகின்றனர் .  
பூதி  களரி ,சாத்தன் பூதியின் மகனாவான் ,இவனக்கு அமரீன்ரி முத்தரையன் என்ற பட்டப்பெயரும் இருந்தது ,சாத்தன் பூதியும் ,பூதி களரியும் ஒருவரே என்ற கருத்து பொருத்தம் உடையதன்று என்று ராசசேகர தங்கமணி கூறுவர்.பூதிகளறி பல்லவ வேந்தன் நிருபதுங்க வர்மன் காலத்தவன் ஆவான் .இந்த முத்தரைய தலைவனை  பற்றி அறிந்து கொள்வதருக்கு பல கல்வெட்டுகள் துணை செய்கின்றன  .இவற்றுள் தஞ்சை  மாவட்டத்தில் உள்ள   திருசின்னம்பூண்டி ,செந்தலை,திருச்சோற்றுத்துறை ,திருகோடிகாவல் முதலிய இடங்களில்  காணப்படும் கல்வெட்டுக்கள் முக்கியமானவியாகும் .இவற்றை ஆராயிந்து பார்த்தால் பூதி களரி பல்லவ மேலான்மைலிருந்து விடுதலைபெற்ற  வேந்தனாக  புதுக்கோட்டைப்  பகுதியில் ஆட்சி புரிந்தான் என்பது விளங்குகிறது .கலையார்வம் மிக்க இவ்வேந்தன் புதுகோட்டை மாவட்டம் பூவாளைகுடியில்  புட்பவனேசுவரர் குடைவரை கோயிலிலை குடைவிக்க செய்தான் என்பது விளங்குகிறது .

 தென்னவன்  இளங்கோ முத்தரையன்  ;- முத்தரைய தலைவருள் புக்ழ்பெற்றவனாகிய தென்னவன் இளங்கோ முத்தரையன் பல்லவ பாண்டியர்க்கு அடங்காமல் தனிதாண்ட  மன்னன் ,இரண்டாம் பெரும்பிடுகு முதரையனான சுவரன் மாறனே இளங்கோ முத்தரையன் எனச் சிலர் கருதுகின்றனர் .பெரும்பிடுகு முதரையனின் பட்டபெயர் பலவற்றுள் இளங்கோ முத்தரையன் ஏன்னு பெயர் இடம் பெற்றமையாலும் ,பெரும்பிடுகு முத்தரையன் பல்லவருக்கு  அடங்கிய மன்னனாகவே தெரிவதால் இக்கருத்து பொருத்தமாக தோன்றவில்லை ,அடுத்து பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன் )நியமத்தில் அமைத்த பிடாரி கோயிலுக்கு இளங்கோ முத்தரையன் தானம் அளித்துள்ள செய்தி செந்தலை கல்வெட்டால் அறியபடுகிறது .இதில் இளங்கோ முத்தரையன் இக்கோயிலை கட்டியதாக கூறபடாமையால் ,பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனும் ,இளங்கோ முத்தரையனும்  ஒருவனாக இருக்க முடியாது என திரு ,கோவிந்த சாமீ கருதுவர் .


விடேல்விடுகு முத்தரையனான குவாவன் சாத்தனே இளங்கோ முத்தரையன் ஆவான் என்று கூறுகிறார் ,இதனை உறுதி படுத்த  இவனது 13ஆம்  ஆட்சியாண்டு கல்வெட்டுகள் தஞ்சை மாவட்டம் திருச்சின்னம் பூண்டியிலும் திருகொடிக் காவலிலும் புதுக்கோட்டை கீரனுரிலும் கிடைத்துள்ளன .இவனுடைய 17 ,18 -ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் திருகோடிக்காவலிலும் ,செதந்தலையிலும் கிடைத்துள்ளன .


இத்தலைவனது திருசின்னபூண்டி கல்வெட்டில் எயில் நாட்டு அட்டுபள்ளி அரிஞ்சிகைபுரம் என்ற தொடர் காணப்பெறுகிறது .இம்மண்ணின் ஆட்சிகாலம் ஆதித்த சோழனுக்கும் முதலாம் பராந்தக சோழனுக்கும் இடைப்பட்ட காலத்தில் கி.பி 880  முதல் 900  ஆண்டு வரையில் இவரது ஆட்சி காலம் .


இளங்கோ முத்தரையனுக்கு உத்தமானி என்னும் பட்டபெயர் வழங்கி வந்தது
.இதனை தஞ்சை மாவட்டம் திருசோற்றுத்துரையில் கோயில் காணப்பெறும் ஒரு கல்வேட்டைகொகொண்டு உணரலாம்


  
இம்மரபு பட்டியலில் காணப்பெறும் நான்காவது மன்னனாகிய பெரும்பிடுகு முத்தரையன் -1 குவாவன் மாறன் செந்தலை பகுதியை ஆண்டு வருகையில் குவாவன் மாறனின் தம்பியான குவாவன் சாத்தனின் தலைமையில் ,இளைய பரம்பரை திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,மலையடி பட்டியில் ஆண்டு வந்தனர் ,அவர்களுள் குவாவன் சாத்தனின் முதல் மகனக்கு சாத்தன் பூதி,என்ற பெயர் வழங்கியது .இவனக்கு விடேல் விடுகு இலங்கோவதிரையன் என்ற பட்டபெயர் இருந்தது .இக்குறுநில மன்னன் இளைய தலைமுறையில் முதல்வனாக கருதப் பெறுகிறான் .நார்த்தமலையில் விசயாலய சோழீசுவரம் என்று வழங்கும் சிவன் கோயிலை எடுபித்துல்லான் .இச்செய்தி இக்கோயிலில் காணப்பெறும் துவரபாலகச் சிற்பத்தின் பீடத்தில் எழுதப்பெற்றுள்ளது .அக்கல்வெட்டின் சரியான வாசகம்


"சாத்தன் பூதியான இலங்கோவதியரையர் எடுப்பித்த 
கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின
தென்னவன் தமிழ் அதியரையன் புதுக்கு "


என்பதாகும் ,ஆகவே விசயாலய சோழிசுவரம் என்ற கற்றளி விசயாலய சோழனால் சோழீசுவரம் அமைக்கபெற்றதன்று .சாதன்பூபதி   என்ற முத்தரைய மன்னனால் அமைக்கப்பெற்று  மல்லன் விதுமன் என்பவனால் புதுபிக்கபெற்றது .பிற்காலத்தில் விசயாலய சோழீசுவரம் எனபெயர்பெற்றது .சாதன்பூதிக்கு பூதி அரிந்திகை என்னும் மகள் ஒருத்தி இருந்தால் ,தென்னாற்காடு  மாவட்டம் திரு கோயிலூர்  வீரட்டனேசுவரர் கோயிலில் காணப்பெறும் மூன்றாம் மூன்றாம் நந்திவர்மன் காலத்திய கல்வெட்டு ப்போதி அரிந்திகை அக்கோயிலுக்கு நிவந்தம் அளித்த செய்தியை கூறுகிறது .சாத்தன் பூதிக்கு சாத்தன் காளி என்ற பெயருடைய உடன்பிறந்தாள் ஒருத்தி இருந்தாள் ,இதனை திருகாட்டு பள்ளி அகினீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று 'நியமத்து  ஆயிரத்தளி  மகதேவர்க்கு விடேல் விடுகு முத்தரையன் மகளான சாத்தன் காளி ' என்று குறிபிடுகிறது .இம்மங்கை நியமத்து ஆயிரத்தளி  இறைவர்க்கு நந்தா விளக்கு வைப்பதற்கு பதின் கழஞ்சு  பொன் வைத்ததாகவும்  அறிகிறோம் .


சாத்தன் பழியிலி - விடேல் விடுகு முத்தரையன் குவாவன்  சாத்தனுடைய  இராண்டாவது  மகனவான் .இவன் புதுகோட்டை மாவட்டம் நார்தமலையில் குடைவரை  கோயில் ஒன்றை அமைத்துள்ளான் .இதனை  நிற்பதுங்கவர்மா பல்லவனின்  ஏழாம் ஆண்டில்  வரையபெற்ற நார்த்தாமலை கல்வெட்டால் அறிய முடிகிறது .இக்கோயில் "சாத்தான் பழியலிச்சுவரம் என்று அழைக்கப்பட்டது .சாத்தன் பழியிலியின்  கல்வெட்டு இதுகாறும் ஒன்றும் கிடைக்கவில்லை .இக்கல்வேட்டிலும் கூட சாத்தன் பழியிலி  பல்லவர்களின் விருதுபெயர்களை  மேற்கொண்டதாகத்  தெரியவில்லை .எனிவே சாத்தன் பழிய்லி  நிருபதுங்க  பள்ளவனக்கு அடங்கி ஆட்சி செய்ததாக  கூறமுடியாது  
பல்லவவரின் மேலாண்மையை  விடுத்து தனிதாண்ட மன்னனாக கருதலாம் 


     சாத்தன் பழிலிக்குப் பழியிலி   சிறியநங்கை என்னும் பெயரில் மகள் ஒருத்தி இருந்தாள் ,இம்மங்கை நல்லாள் ,மீனவன்  தமிழ்திரையனான  மல்லன் ஆனந்தனக்கு  மணமுடிக்கபெற்றாள்  .இவ்விருவருக்கும் அனந்தன் பழியிலி  என்ற மகனோ மகளோ இருந்ததாக தெரிகிறது .தனது தந்தை சாத்தன்  பழியிலியால் அமைக்கப்பெற்ற நார்த்தாமலை குடைவரை கோயிலின்  முகமண்டபத்தினை  பழியிலி சிறிய நங்கை அமைத்துள்ளான் .இதனை  நார்த்தாமலை மேல்மலை குன்றில் அமைந்துள்ள  குடைவரைக்  கோயிலின்  முன்மண்டபத்து  வடக்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றினால்  அறிய முடிகிறது .


தனது  ஆட்சியின் தொடக்க காலத்தில் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்த சாத்தன் பழயிலி  தனது  வலிமையை  பெருக்கி   முத்தரையரின் தனியாட்சியை  ஏற்படுத்தியதாக தெரிகிறது .தஞ்சையை விசயாலயன் வெற்றிகொண்டபின்  முத்தரையர்கள் புதுகோட்டைப் பகுதிக்கு சென்று இருக்கவேண்டும் சாத்தன் பழிலியின் இறுதி  காலத்தில் முத்தரையர்  வீழுசியுற்றனர்  எனக்கூறலாம் .பல்லவ வேந்தன் நிருபதுங்கவர்மனும் ச்சீரிவள்ளபனும் சாத்தன் பழிலியின்  உடன் காலத்தவர் ஆவர் .சாத்தன்  பழியிலி  ஏறத்தாழ கி.பி 830  முதல் 860வரை  ஆட்சி புரிந்துள்ளார் .

Friday, April 6, 2012

செந்தலைதூண்  கல்வெட்டு ;-  செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும்  நான்கு தூண்களின் அடிப்பாகங்கள்  சிதைந்து காணப்பெறுகின்றன ,அவைகள் சிதையாமல் இருந்திருந்தால் 27  வெண்பாக்கள்   நமக்கு கிடைத்திருக்கும் ,இந்த நான்கு தூண்களில்  காணப்பெறும் கல்வெட்டுக்கள் ,சுவரன் மாறன்  நியமத்தில் பிடாரி கோயில் ஒன்று எடுபித்த செய்தியை தெரிவிக்கின்றன ,மற்றும் தான் வெற்றிகொண்ட ஊர்களின் பெயர்களையும் கல்லில் வெட்டும்படி ஆனையி ட்டுல்லான்  .அதனை சுவரன் மாறானவன் எடுபித்த பிடாரி கோயில் அவனேரிந்த ஊர்களும் அவன் பேர்களும்  அவனை பாடினர் பேர்களும்  இதூங்கன் மேலேழுதின இவை " என அக்கல்வெட்டு கூறுகிறது இக்கல்வெட்டுகளில் சுவரன் மாறன் கீழ்கண்ட பட்டங்களை மேற்கொண்டுள்ளான் .


  (1 ) சிரீசத்துரு மன்னன் (2 )சிறீ கள்வர் கள்வன் (3 )  சிறீ அதிகாசன் .மேலும் பத்து பட்ட பெயர்களையும் அக்கல்வேட்டுக்கள் குறிப்பிடுகின்றன .அவையாவன சிறீ மாறன் ,அபிமான தீரன் ,சத்துரு கேசரி ,தமராளன் ,செருமாரன்  வேலு மாறன் ,சாத்தன் மாறன் ,தஞ்சை கோன்,வல்லக்கோன்,வான்மாரன் முதலியனவாகும் .சுவரன் மாறனை பற்றி மூன்று தமிழ் புலவர் பாடியுள்ளதாக அவனிடைய கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம் .


1 ) திருச்சி மாவட்டத்தில் உள்ள  பாசில் வேல் நம்பி 
2 ) கோட்டாற்று இளம் பெருமானார் 
3 )  கிழார்க்  கூற்றத்துப் பவதாயமங்கல்த்து  குவாவன் காஞ்சன்  


மேற்  கூறப்பெற்ற  விருது பெயர்களையும் ,சுவரன் மாறனை பற்றிப்  பாடிய புலவர்களையும் ஆதாரமாக கொண்டு இகுறுநில மன்னர் ஒரு பெரும் பேரரசனாகத்  திகழ்ந்தான்  என்று நடன காசிநாதன் கூறுகிறார் ."முத்தரைய அரசர்களுள் இவன்  பெரும் பேரரசனகத் திகழந்தவன் என்று கூறலாம் ,பல்லவ மன்னர்களுள்  முதலாம் நரசிம்மவர்மனுக்கும் ,சோழ   மன்னர்களுள்  முதலாம் ராசராசனுக்கும் பாண்டிய மன்னர்களுள் மாறவர்மன்  சுந்தரபாண்டியனுக்கும்  இவனை ஒப்பிடலாம் .தமிழ் புலவர்களை ஆதரித்து தனது வெற்றிகளை குறிக்கும் செய்திகளை வெண்பாக்களில் எழுதி பொரிக்க செய்த செய்கையால் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள்  அனைவரையும் இவன் விஞ்சி நிற்கிறான் ".